பொதுப்பட்டியலில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு: தமிழக அரசு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு விளக்கம்

Tuesday, July 27, 2010


ஒவ்வொரு நூறு இடங்களில் 69 இடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மீதி 31 இடங்கள் பொதுப்பட்டியல் மூலமும் நிரப்பப்பட வேண்டும் என்பது சட்டமாகும்.
69 இடங்களை நிரப்பும் போது அதில் 3.5 மூன்றரை சதவிகித இடங்கள் முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். மீதி உள்ள 31 இடங்கள் அதிகத் தகுதி உள்ளவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

இந்த 31 இடங்களில் முஸ்லிம்களும் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் பொதுப்பட்டியலில் போட்டியிடும் உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு.
சட்டத்தில் தெளிவாக இப்படி கூறப்பட்டாலும் அந்தந்த துறை அதிகாரிகள் முஸ்லிம்கள் பொதுப்பட்டியலில் போட்டியிடும் போது உங்களூக்கு மூன்றை மட்டும் தான். அது நிரப்பப்பட்டு விட்டதால் பொதுப்பட்டியலில் உரிமை கோர முடியாது என்று நிராகரிக்கும் தகவல்கள் அதிக அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு வந்தன.
இதை முதல்வரின் கவனத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு சென்றது. இதன் பின்னர் தமிழக அரசு இது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்து தவ்ஹீத் ஜமாஅதுக்கு பின் வரும் விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பொதுப்பிரிவில் முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையை எந்த அதிகாரியாவது மறுத்தால் பினவ்ரும் அரசின் விளக்கத்தை பிரிண்ட் எடுத்துச் சென்று காட்டி உங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொள்ளலாம். அப்படியும் நீதி கிடைக்காதவர்கள் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநிலத் தலைமையை தொடர்பு கொள்ளலாம்.
(பெரியாதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

செய்தி : www.tntj.net.


0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP