அமல் செய்வதில்தான் எத்துனை ஆர்வம் இவருக்கு..?
Friday, July 16, 2010
நபி [ஸல்] அவர்களின் இந்த உம்மத்தில் தலைசிறந்தவர் அபூபக்கர்சித்தீக்[ரலி] அவர்கள் என்பதை நாமெல்லாம்அறிந்துவைத்துள்ளோம். இத்தகைய சிறப்பு அவர்களுக்குஇருந்தும், சொர்க்கத்திற்கு உரியவர் என்று இறைத்தூதரால்பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் அபூபக்கர்[ரலி] அவர்களின்அமல்கள் குறைந்ததா என்றால் இல்லை. நல்லமல்கள் என்றுஎவையெல்லாம் உள்ளதோ அவைகளை அன்றாடம்செய்யக்கூடிய அற்புத மனிதராக அபூபக்கர்[ரலி] அவர்கள்திகழ்ந்துள்ளதற்கு சான்றாகவும், நமக்கும் அத்தகைய ஆர்வம்வரவேண்டும் என்பதற்காகவும் இந்த பொன்மொழி இங்குபதியப்படுகிறது;
அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
[ஒருநாள்] இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [எங்களிடம்] இன்றுஉங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார் என்று கேட்டார்கள்.
அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், 'நான்' என்றார்கள்.
இன்றைய தினம் உங்களில், ஜனாஸாவை பின் தொடர்ந்துசென்றவர் யார் என்று கேட்டார்கள்.
அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.
இன்றையதினம் உங்களில் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் யார்என்று கேட்டார்கள்.
அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.
இன்றையதினம் ஒரு உங்களில் ஒரு ஒரு நோயாளியின்நலம்விசாரித்தவர் யார் என்று கேட்டார்கள்.
அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.
அப்போது இறைத்தூதர் அவர்கள், இவை அனைத்தும் ஒருமனிதரிடத்தில் ஒன்று சேர்ந்தால் அவர் சொர்க்கத்தில் நுழையாமல்இருப்பதில்லை என்று கூறினார்கள். [நூல்;முஸ்லிம்].
0 comments:
Post a Comment