தீவுத்திடல் போராட்ட களத்திற்கு தயாராகி விட்டீர்களா ?

Saturday, June 26, 2010

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வஞ்சிக்கப்பட்ட சமுதாயமாய் அரை நூற்றாண்டுகள் வாழ்ந்ததுப் போதாதா ?
நம்முடைய சந்ததிகளும் வாழ்நாள் முழுவதும் வஞ்சிக்கப்பட்ட சமுதாயமாய் வாழ வேண்டுமா ?

சிந்தியுங்கள் சகோதரர்களே !
தீவிரவாதிகள் என்ற அவப்பெயரை அரை நூற்றாண்டுகள் சுமந்ததுப் போதாதா?  
நம்முடைய சந்ததிகளும் தீவிரவாதிகள் என்ற அவப்பெயரை சுமக்க வேண்டுமா ?
சிந்தியுங்கள் சகோதரர்களே !
இயற்கை வளம் மிக்க ஈர மண்ணில் பிறந்துவிட்டு காசுக்காக கெந்தக மண்ணில் வெந்து மடிந்ததுப் போதாதா ? 
நம்முடைய சந்ததிகளும் காசுக்காக கெந்தக பூமியில் வெந்து மடிய வேண்டுமா ? 
சிந்தியுங்கள் சகோதரர்களே !
மதச்சார்பின்மை வேடமிடும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிடம் இதுவரை ஏமாந்ததுப் போதாதா ?
நம்முடைய சந்ததிகளும் தொடர்ந்து ஏமாற வேண்டுமா ?
ஏமாந்ததுப் போதும் ! இனியும் ஏமாற மாட்டோம் !
ஏமாறுவது இறை நம்பிக்கையாளனுக்கு அழகுமல்ல !
இறுதி முடிவெடுக்க குடும்பத்துடன் தீவுத்திடலை நோக்கி அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் !
ஜூலை 4க்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் தீவுத்திடல் போராட்ட களத்திற்கு உங்களை தயார் படுத்தி விட்டீர்களா ? 
போராட்ட களத்திற்கு செல்வதற்கு முன் நம்முடைய பாட்டன் முப்பாட்டன்கள் சுதந்திரப் போராட்டத்திற்காகவும்இந்திய தேச நலனிற்காகவும் உண்மையாக உழைத்த உத்தமர்களுக்கு  சுதந்திர இந்தியா அவர்களுக்கு (0)சன்மானத்தையும் நிணைவு கூர்ந்து விட்டு தீவுத்திடல் நோக்கி வீர நடைப் போடுங்கள்.
வஞ்சிக்கப்பட்ட சமுதாயம் ஓர் ஃப்ளாஷ் பேக்.   
பஞ்சாபில் ஒருப் பகுதியையும்மேற்கு வங்கத்தில் ஒருப் பகுதியையும் பிரித்துக் கொடுத்து இது தான் சுதந்திரப் போராட்டத்திற்காக இழந்த கோடிக் கணக்கானப் பொருளாதாரத்திற்கும்பல்லாயிரக் கணக்கான உயிர் தியாகத்திற்கும் பரிசென்று ஏமாற்றிய துரோக வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள் ?
பஞ்சாபிலும்மேற்கு வங்கத்திலும் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் பரிசென்றால் ?
மஹாராஷ்டிராவிலிருந்து மதராஸ் வரை சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர்நீத்த வீர தியாகிகளுக்கு என்னப் பரிசு ?
இனச் சுத்திகரிப்பு
இன்றைய தடாபொடாஎன்கவுன்டரை மிஞ்சும் அளவுக்கு கேரளத்து மாப்பிள்ளா மார்களின் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மாப்பிள்ளாமார் இனச்சுத்திகரிப்பு சட்டம் வெள்ளையன் அரசாங்கத்தால் இயற்றப்பட்டு கூட்டம் கூட்டமாய் கேரளத்து மாப்பிள்ளா மார்களை கொன்று குவித்து அவர்களின் மனைவி மார்களை விதவைகளாக்கினார்கள் !
கப்பலோட்டியத் தமிழன்
கப்பலோட்டியத் தமிழன் வவுசியை இன்றைய பாடப்புத்தகங்களில் தெரிந்து கொண்ட நம்முடையப் பிள்ளைகளுக்கு வவுசி ஓட்டியக் கப்பலை விலைக்கு ( பத்துலட்சம் ரூபாய்க்கு ) வாங்கிக் கொடுத்து அந்நியர்களின் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.
கப்பலை ஓட்டிய மாலுமியின் வாரிசுகள் ஐ.ஏ.எஸ் ஆகவும்ஐ.பி.எஸ் ஆகவும் முடியுமாம் கப்லை வாங்கிக் கொடுத்த வள்ளலின் வாரிசுகள் பாலர் பள்ளிக்குக் கூட செல்ல முடியாமல்ஒருவேளை உணவைப் பெறமுடியாமல்,இரண்டு ஆடைகளைப் பெறமுடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டுமாம் ?
என்னே நீதி ???
கள்ளுக்கடை மறியல்
காந்திஜியின் கள்ளுக்கடை மறியலின் அழைப்புக்கு மதிப்பளித்து மதுரை மாநகரில் திரண்ட 19ப் பேரில் 10 பேர் முஸ்லிம்கள் என்பது இந்திய சுதந்திர வரலாற்றின் பொண்ணேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதில் பத்து என்பது சதவிகித்தைத் தாண்டி இந்திய தேசிய நலனுக்காக உயிரைக் கொடுக்கவும் முன்வந்தனர்.
மைசூர் வேங்கை.
வெள்ளயைனுடைய உறக்கத்தை கலைக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த மைசூர் வேங்கை திப்பு சுல்தானின் கோட்டைகள் இன்றளவும் சான்றுப் பகர்ந்து நின்று கொண்டிருக்க அவனுடைய வீர வரலாற்றை கற்பனைக் கதை என்றுக்கூறி இருட்;டடிப்பு செய்த துரோக லரலாற்றை நிணைவுக் கூர்ந்து கொள்ளுங்கள். 
அந்நிய ஆக்ரமிப்பாளனுக்கு காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள் இன்று பிரதமரிலிருந்து ப்யூன் வரை அரசாங்கத்தில் கோலோச்சுகின்றனர்.
அந்நிய ஆக்ரமிப்பாளினுடன் மன்னன் முதல் மக்கள் வரை வேங்கையாய் சீறிப்பாய்ந்தவர்களின் வாரிசுகள் இன்று ப்யூன் வேலையில் கூட அமர முடியவில்லை.
கேரளத்து மாப்பிள்ளாமார்களின் வாரிகளுக்கும்மைசூர் வேங்கை திப்புவின் வாரிசுகளுக்கும்மதுரை மாநகரில் காந்திஜியுடன் கள்ளுக்கடை மறியலில் திரண்டவர்களின் வாரிசுகளுக்கும்பத்து லட்சத்தை முடக்கி கப்பலை வாங்கிக் கொடுத்து இந்தியாவின் தன்மானம் காத்த வள்ளலின் வாரிசுகளுக்கும் 
பத்து சதவிகிதம் அரசுப் பணிகளிலும்கல்விகளிலும்இன்னும் அவ்வப்பொழுது அரசு அறிவிக்கும்  நலத்திட்டங்களிலும் வாழும் உரிமையை நமது முன்னோர்களின் தியாகத்திற்கு பரிசாகக் கேட்டுக் கோரஸாக குரலெழுப்ப 15லட்சம் மக்களை தீவுத்திடலுக்கு அழைக்கிறது TNTJ.
அகண்ட பாரதம்
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் போல் ஊருக்கு ஒரு ராஜாதெருவுக்கு ஒரு மந்திரி என்றிருந்த சிற்றரசுகளை எல்லாம் மூட்டைக்கட்டி அவைகளை ஜில்லாக்களாகவும்தாலுக்காக்களாகவும் மாற்றி அகண்ட பாரதத்தை உருவாக்கி உலக அளவில் இந்தியாவை வல்லரசாக தலை நிமிறச் செய்தப் பெருமைமிகு வரலாறு நம்முடைய பாட்டன் முப்பாட்டனுடையது,
சர்வே சிஸ்டத்தை உருவாக்கி எல்லைக் கற்களை ஊண்டி அகண்ட பாரதத்தின் மொத்த நிலப்பரப்பளவையும் சிறியதொரு ஸ்கெட்சில் உள்ளடக்கி சார்பதிவு முறையை ஏற்படுத்தியப் பெருமை மிகு வரலாறும் நம்முடைய பாட்டன்முப்பாட்டனுடையது,  
வக்கீல் வைத்து வாதாடும் வாதப் பிரதி வாதங்கள் முறையை உருவாக்கி கடைக் கோடி மக்களுக்கும் நீதிப் பரிவாலணத்தில் நம்பிக்கையை விதைத்தது நம்முடைய பாட்டன்முப்பாட்டனுடையது,    என்பதற்கு இன்றும் வக்கீல்,வாயிதாவக்காலத்அமுல்ரத்துஅசல்போன்ற அரபி வார்த்தைகள் நீதிமன்றங்களில் மாற்ற முடியாதளவுக்கு வேரூன்றி நிற்கும் பெருமை மிகு வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.
அகண்ட பாரதத்தை உருவாக்கி உலக அளவில் இந்தியாவை தலை நிமிறச்செய்து எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் இந்திய மண்ணை ஆண்டதற்கான அடையாளமாக இன்றளவும் ஒரு சில அரபி வார்த்தைகள் மட்டுமே அரசு அலுவலங்களில் கோலோச்சுகின்றது ஆனால் அவர்களின் வாரிசுகள் அரசு அலுவலக கட்டங்களுக்குக் கூட கூர்காவாக நியமிக்கப்படாமல் அந்நிய தேசத்து அகதிகளாக்கப்பட்ட துரோக வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.
அகண்ட பாரதத்தை உருவாக்கி உலக அளவில் இந்தியாவை வல்லரசாக்கிய வாரிசுகளுக்கு பத்து சதவிகிதம் அரசுப் பணிகளிலும்கல்விகளிலும்இன்னும் அவ்வப்பொழுது அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களிலும் வாழும் உரிமையை கேட்டுக் கோரஷாக குரலெழுப்ப 15 லட்சம் மக்களை தீவுத்திடலுக்கு அழைக்கிறது TNTJ..
காந்திஜியின் அஹிம்சாப் போராட்டத்திலும் முஸ்லீம்கள்.
இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த இந்தியக் குடிமகனுக்கு இந்தியரல்லாதவனால் வழங்கப்பட்ட சர்பகதூர்மாஜிஸ்திரேட்ஷம்சுல் உலமா போன்ற கவுரவப் பட்டங்கள் அனைத்தையும் வீசி எறியச் சொன்ன காந்தியடிகளின் கோரிக்கைக்கு உயிரூட்டியவர்கள் அன்றைய கான் சாஹிப் முதல் காயிதேமில்லத் வரை என்பதற்கு பாயைங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய காயிதே மில்லத் அவர்களின் வீரவரலாறு சான்றுப்பகர்ந்து நிற்கிறது.
காந்திஜியின் அஹிம்ஸா வழிப் போராட்டதிற்கு உயிரூட்டுவதற்காகஇந்திய தேசத்தின் தன்மானம் காப்பதற்காக தங்களுடைய பட்டம்பதவிகளையும்,படிப்புகளையும் வீசி எறிந்த தன்னலமற்ற தியாகிகளின் வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.
விதேசிசுதேசி கொள்கை
ஆக்ரமிப்பாளனின் இறக்குமதிப் பொருள்களின் வியாபாரத்தை முடக்குவதற்காக காந்திஜி அவர்கள் அறிவித்த விதேசிசுதேசி கொள்கைக்கு முதன் முதலில் கதர் ஆடை நூற்று உயிரூட்டியவர் முஸ்லீம் வீரப் பெண்மனி என்றப் பெருமை மிகு வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள். 
காந்திஜியின் சுதேசிக் கொள்கைக்கு உயிரூட்டிய முஸ்லீம்கள் இன்னும் அதை மிளிரச் செய்வதற்காக  வெள்ளையர்களின் உடை முதல் மொழி வரை புறக்கனிக்கச் சொன்ன உலமாப் பெருமக்களின் தேசப்பற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.
பள்ளிவாசல்களிலும் எதிர்ப்பு பிரச்சரம்.
எண்ணற்றக் கோயில்களும்தேவாலயங்களும்பள்ளிவாசல்களும்இன்னும் பிற மதத்தவர்களின் ஆலயங்களும் நிறைந்து காணப்பட்ட மதசார்பற்ற இந்தியப் பெருநாட்டில் முஸ்லீம்களின் பள்ளிவாசல்களைத் தவிற வேறெந்த வழிபாட்டுத் தலங்களிலும் அதன் ஒலிப் பெருக்கிகளில் தடையை மீறி சுதந்திரப் பிரகடனம் நிகழ்த்தப்பட்டதில்லைமுஸ்லீம்களின் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் மட்டுமே சுதந்திரப் பிரகடனம் நிகழ்த்தப்பட்டது என்பதற்கு இன்றளவும் உத்தரப்பிரதேசத்தின் தொல்பொருள் இலாக்கா வசம் உள்ள கூனி மஸ்ஜிதிற்குள் வெள்ளையனின் துப்பாக்கி குண்டுகள் துளைத்தெடுத்த முஸ்லீம்களின் ரத்தக் கறைப் படிந்த பள்ளிவாசல் சான்றுப் பகர்ந்து நிற்பதை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.
ஒருப் பக்கம் நேதாஜியின் ராணுவத்தில் ஆயுதம் ஏந்தி வீர தீரத்துடன் போரிட்டவர்களிலும்,  சதவிகிதத்தைத் தாண்டிப் பங்களிப்பு செய்த சமுதாயம் முஸ்லீம் சமுதாயம்இன்னொருப் பக்கம் காந்திஜியின் அஹிம்ஸா வழிப் போராட்டத்தில் சதவிகித்தைத் தாண்டி பங்களிப்பு செய்த சமுதாயம் முஸ்லீம் சமுதாயமாகும்.
ஆயுதம் ஏந்தியும்அஹிம்ஸா வழியிலும் சதவிகித்தைத் தாண்டி சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பு செலுத்தியவர்களின் வாரிசுகளுக்கு பத்து சதவிகிதம் அரசுப் பணிகளிலும்கல்விகளிலும்இன்னும் அவ்வப்பொழுது அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களிலும் வாழும் உரிமையைக் கேட்டுக் கோரஷாக குரலெழுப்ப 15 லட்சம் மக்களை தீவுத்திடலுக்கு அழைக்கிறது TNTJ.   
நெருக்கடி நேரத்தில்
1946 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அபுல்கலாம் ஆஸாத் ?
1947 முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராக ஜவஹர்லால் நேரு ?
நெருப்பில் நடப்பதுப்போன்ற நெருக்கடியான நேரத்தில் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர் முஸ்லிம் சமுதாயத்தவராம் ?
நெருக்கடித் தீர்ந்ததும் ஆட்சி கட்டிலில் அமருவதற்கு தகுதியானவர் ஆரிய சமுதயாத்தைச் சேர்ந்தவராம்? 
தீவுத்திடலை நோக்கி நம்மை அழைப்பது ஏமாற்றிப் பறிக்கப்பட்ட பிரதமர் பதவியைக் கேட்பதற்காக அல்ல.
வாசல் தேடி வந்த வாரியப் பதவியைக் கூட வேண்டாம் என்று தூக்கி எறிந்த தன்னலமற்ற சமுதாய Nசுவகர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்.
ப்ளாட்பாரங்களில் குடியிருக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளை குறைந்தது குடிசைகளில் அமர்த்துவதற்காகவாவது குரலெழுப்ப தீவுத் திடலை நோக்கி நம்மை அழைக்கின்றனர். 
முதுகில் குத்திப் பழக்கப்பட்ட காங்கிரஸை விட முகத்தில் அறையும் கட்சிகள் மேல்
இந்திய சுதந்திரத்திற்காக தங்களின் இன்னுயிரையும்பொருளாதாரத்தையும்,பட்டம் பதவிகளையும்படிப்பையும் துச்சமெனக் கருதிய வீரத் தியாகிகளின் வரலாற்றை அறிந்த மதச்சார்பின்மை வேடமிடும் காங்கிரஸ் நமக்கு வெறும் பத்து சதவிகித இடஓதுக்கீட்டை அரசு நலத்திட்டங்களிலும்அரசுப்பணிகளிலும்,கல்வியிலும் ஒதுக்கித் தர மறுத்தால் ?
முதுகில் குத்தும் காங்கிரஸை விட முகத்தில் அறையும் காங்கிரஸல்லாத கட்சிகள் மேல் என்பதையும் இறுதி முடிவு கட்டுவோம்,
உங்களது வயதான தாய் தந்தையரையும்பச்சிளங் குழந்தைகளையும்மாற்றுத் திரணாளிகளையும் அழைத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு தீவுத் திடலை நோக்கி வீர நடைப் போடுங்கள்.















1 comments:

IbnuNabeesa said...

A Spritual article which creates a awareness to the muslim public. Good

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP