ஷியா - கொள்கை என்ற பெயரில் அயோக்கியத்தனங்கள் Part: 2

Tuesday, April 20, 2010


19. நானும் நபியும் ஒன்றே !

‘எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல் எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல் என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்’ என்று அலி (ரழி) கூறினார்களாம்.
–அல்உஸுலுல் காபி பாகம் 1 பக்கம் 197 198.
20. பன்னிரெண்டு இமாம்காளும் உலகம் படைக்கப்படுவதறிறிக்கு முன்னரே இருந்திருக்கிறார்களாம்

ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள். புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே! இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார்:

பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும் நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில் பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும் பன்னிரெண்டு இமாம்களும் மலக்குகளும் நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.

–விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே.
இஸ்லாமி தஹ்ரான் வெளியீடு பக்கம் 58

21. அலி (ரழி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள்

அலி (ரழி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.
–காஷானியின் கிதாபுஸ்ஸாபிஇ பாகம் 1இ பக்கம் 347



22. ஸஹாபாக்கள் காபிர்கள்

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர் என்று ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தார் இப்னுல் அஸ்வத் அபூதர் அல்கிபாரி ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகிவிட்டனர்.
–கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 245



23. அபூபக்கர் (ராழி) அவர்கள் மீது அல்லாஹ் வீண் சாபம் உண்டாக வேண்டுமாம்

அபூபக்கரும் உமரும் அலி (ரழி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
–கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246

24. அபூபக்கர் (ராழி) காஃபிர்

(அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.
–கிதாபுர்ரவ்லா மினல் காபிஇ பக்கம் 296



25. அலியை தவிர அனைவரும் உலக ஆதாயம் பெறுகின்றனர்

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
–கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு





ஷீயாக்களிடம் ‘முத்ஆ’ என்றொரு கொள்கை உண்டு. அதாவது சட்டபூர்வ விபச்சாரம். இதன் மூலம் ஒழுக்க வாழ்க்கையை சீரழித்தவர்கள் சீரழித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஷீயாக்கள்.

ஒரு பெண்ணை சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்கு பேசிக் கொண்டு அவளுடன் கூடுவதற்குத் தான் ‘முத்ஆ’ என்பர். இதுபற்றி ஷீயாக்கள் தரும் விளக்கத்தைக் காண்போம்.

27. விபச்சார சட்டங்கள்

ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ‘முத்ஆ’ செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்டபோது ‘செய்யலாம்’ என்றாராம்.
–அல்புரூவு மினல் காபி பாகம் 5 பக்கம் 460

28.விபச்சார சட்டங்கள்

இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா? என்று அலி (ரழி) அவர்களிடம் கேட்ட போது ‘ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில் இவர்கள் கூலிக்காரர்கள்’ என்றார்களாம்.
–தஹ்தீபுல் அஹ்காம் பாகம் 7 பக்கம் 259

29. விபச்சார சட்டங்கள்

‘ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது’ என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நீ ஏன் இதுபற்றி அலட்டிக் கொள்கிறாய் அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியதுதான்’ என்று பதிலளித்தார்களாம்.
–அல்புரூவு மினல் காபி பாகம் 5 பக்கம் 462

30 விபச்சார சட்டங்கள்

‘மஜுஸி எனும் மதத்தவளுடன் இவ்வாறு முத்ஆ செய்யலாம்’ என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
–தஹ்தீபுல் அஹ்காம் பாகம் 7 பக்கம் 256



31. விபச்சார சட்டங்கள்

‘யூத கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி முத்ஆ செய்யலாம்’ என்று அபுல் ஹஸன் (8வது இமாம் கூறினாராம்! அதே நூல் அதே பக்கம்)



32.விபச்சார சட்டங்கள்

விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவளுடனும் இவ்வாறு வாடகை மனைவியை அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவளை விபச்சாரத்திலிருந்து தடுக்குமாம். (அதே நூல் அதே பக்கம்)



33. ‘ஹுஸைன் (ரழி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.’
–அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252





34. ஹுஸைன் கப்ரை ஸியாரத் செய்தால் சொர்கம்

‘யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு’ என்று நபி (ஸல்) கூறினார்களாம்.
–அல் இர்ஷாத் பக்கம் 252

35 இட்டுக்கட்டப்பட்டவைகள்.

‘காயிம்’ வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
–தப்ஸீர் சாபி பாகம் 1 பக்கம் 172

காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
–தப்ஸீர் சாபி பாகம் 2 பக்கம் 108

விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான். கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள். பேரீத்தம் பழங்களைத் திருடிக் கொண்டிருந்தவன் வாத்தாக மாற்றப்பட்டான். யெமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான். கோள் சொல்லித் திரிந்தவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌடீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள். ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ எனும் நூலில் 485 ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.

இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீயாத் தலைவருக்கு இவர்கள் அளித்து வரும் மரியாதை இருக்கிறதே: சாயி பாபாவுக்கு அவர் பக்தர்கள் செய்யும் மரியாதையும் மிஞ்சி விடும். இவர்கள் தான் இஸ்லாமிய புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்!

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP