துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வதின் சிறப்பு

Thursday, November 19, 2009

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ رواه الترمدي

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஏனைய நாட்களில் செய்கின்ற நல்லறங்களை விடவும் (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்கின்ற (நல்லறங்கள்) அல்லாஹ்விடம் மிகவும் விருபத்திற்குரியதாகும். அப்போது நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது கூட சிறந்ததில்லையா? எனக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரவர்கள் ஜிஹாத் செய்வது கூட சிறந்ததில்லை. ஆனால் தன்னுடைய உயிரோடும் செல்வத்தோடும் (இறைவழியில்) புறப்பட்டு அவற்றில் எந்த ஒன்றோடும் திரும்பவில்லையே அந்த மனிதரைத் தவிர என்று கூறினார்கள்
நூல் : திர்மிதி (688)

அரஃபா நோன்பு
صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்''அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : முஸ்லிம் (2051)
தமிழகத்தில் நேற்று இரவு துல் ஹஜ் பிறை பார்க்கப்பட்டதின் அடிப்படையில் வரும் நவம்பர் 27 ம் தேதி வெள்ளிக்கிழமை அரஃபா நோன்பு நோற்கவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP