எச்சரிக்கையுட்டும் நபி மொழி - 6
Tuesday, September 15, 2009
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விற்பனைக்காக வைத்திருந்த) ஒரு தானியக் குவியலை கடந்து சென்றாகள். அந்த குவியலுக்குள் தமது கையை நுழைத்தார்கள். ஈரம் அவர்கள் விரலில் பட்டது “தானியத்திற்குரியவரே! இது என்ன (ஈரம்)?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதில் மழை நீர் பட்டுவிட்டது” என்று கூறினார். “ஈரமானதை மக்கள் பார்க்கும் வீதமாக மேலே வைக்கக் கூடாதா? மோசடி செய்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லீம் 164
நபி வழித்தொகுப்பு 2 எச்சரிக்கையுட்டும் நபிமொழி 100 யிலிருந்து.....
0 comments:
Post a Comment